டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு.. திடீரென வெடித்துச் சிதறிய மர்ம பொருள்.. காவலர் படுகாயம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் திடீரென மர்ம பொருள் வெடித்துச் சிதறியதில் ஒருவர் காயமடைந்தார்.
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் இன்று காலை திடீரென மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காவலர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலில் நீதிமன்ற அறை எண் 102ல் உள்ள லேப்டாப் வெடித்ததாகவே கூறப்பட்டது. இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (IED) மற்றும் டிபன் பாக்ஸ் போன்ற ஒரு பொருளும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் சிறப்புக் காவல் ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்
மேலும், நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு என்பதால் தேசியப் பாதுகாப்புப் படை குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது, வெடி விபத்து குறித்து தங்களுக்குக் காலை 10.40 மணியளவில் தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் இதே ரோகிணி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தான் 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications