ஜரூரா நடக்குது வேலை..! ஒரே நாடு ஒரே இந்தியா - டெல்லியில் இன்று ராம்நாத் கோவிந்த் குழு முதல் கூட்டம்!
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. லோக்சபா, அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தேவை என்கிறது மத்தியில் ஆளும் பாஜக.
அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அறிவித்தது. அந்தக் குழுவில் இடம்பெற முடியாது என காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இல்லத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் இது. இன்றைய கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாதக, பாதக அம்சங்கள் விவாதிக்கப்படும். இக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்படும்.












Click it and Unblock the Notifications