பாகிஸ்தான் மீது இனி தாக்குதல் உண்டா? அஜித் தோவல் வார்னிங்.. நாட்டை காப்பாற்றுவாரா ஷெபாஸ் ஷெரீப்?
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. மொத்தம் 9 பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 70 பேர் வரை பலியாகினர். இதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கொக்கரித்து வரும் நிலையில் மீண்டும் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்பது பற்றி நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இன்று நம் நாடு பதிலடி கொடுத்தது. இன்று அதிகாலை 1 மணிக்கு பிறகு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 5 பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தானில் செயல்பட்ட 4 பயங்கரவாத முகாம்கள் என்று மொத்தம் 9 இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் மீது இனி தாக்குதல் நடத்தப்படுமா? என்பது பற்றி நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அடுத்த பேட்டியில், ‛‛பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் நமக்கு இல்லை. ஆனால் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்து சீண்டினால் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்'' என்று கூறினார்.
அதாவது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இனி பாகிஸ்தான் அமைதியாக இருக்க வேண்டும். அதையும் மீறி நம் நாட்டுடன் மோதினால் இன்னும் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு வார்னிங் செய்துள்ளார். ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இன்னும் திருந்தவில்லை. இன்றைய தாக்குதலை தொடர்ந்து நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த முப்படைகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு பிறப்பித்துள்ளார். நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து முடிவுகளையும் எடுக்க முப்படைகளுக்கும் சுதந்திரம் வழங்கி உள்ளார்.
இப்படியான சூழலில் தான் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்கினால் திரும்பி அடிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தானை காப்பாற்றும் பொறுப்பு என்பது அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கையில் தான் உள்ளது. தாக்குதல் தேவையில்லை என்று பம்மினால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் மீண்டும் இந்தியாவிடம் வசமான பதிலடியை பெற வேண்டி இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications