புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. பிரதமர் மோடி திறக்க ராகுல், எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு
டெல்லி: நமது நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி 3 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டினார். இக்கடடிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மே 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28-ந் தேதி இந்துத்துவவாதி சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பதா? என ஏற்கனவே சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கடிட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். நாட்டின் நாடாளுமன்றத்தின் ஜனாதிபதியின் அரசிய சாசனப்படியான பங்களிப்பை இது நிராகரிப்பதாகும். ஆகையால் நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ஆர்ஜேடி எம்பி மனோஜ் கே ஜா கூறுகையில், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்துவைக்காவிட்டால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் காந்தியும் சாவர்க்கரும் ஒரே சட்டகத்தில் இருக்க முடியாது; அம்பேத்கரும் கோல்வாக்கரும் ஒரே சட்டகத்தில் இருக்க முடியாது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா கூறுகையில், நாட்டின் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும். அதுதான் மரபு என்றார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், அரசியல் சாசன விழுமியங்களையும் மரபுகளையும் மீறக் கூடியவராக இருக்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் ஜனாதிபதிதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications