திருப்பரங்குன்றம்: நீதிபதிக்கு சப்போர்ட் செய்த அமித்ஷா! எதிர்க்கட்சி எம்பிக்கள் கொத்தாக வெளிநடப்பு
டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், வாக்கு வங்கியை கவரவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமித்ஷா மக்களவையில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் இந்த விவகாரம் குறித்து அமித்ஷா பேசுகையில், "நீதிமன்ற வழக்கில் தோற்றால் உடனடியாக இந்தியா கூட்டணியினர் நீதிபதியை குற்றம்சாட்ட தொடங்கிவிடுகின்றனர். தேர்தலில் தோற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குற்றம்சாட்டுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான அவர்களின் குற்றச்சாட்டுகளை யாரும் கவனிக்காததால் இப்போது வாக்கு திருட்டு என்று குற்றம்சாட்டை கொண்டு வருகின்றனர்.

நீதிபதி தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க தீர்மானமா? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான். எனவே இந்த நாட்டின் மக்கள் மக்கள் ஒருபோதும் இந்தியா கூட்டணிக்கு உதவி செய்ய மாட்டார்கள்" என்று கூறினார். ஏற்கெனவே காங்கிரஸ் எம்பிக்கள், வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications