பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்
Recommended Video
டெல்லி: ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட நேரம் வழங்கி மக்களவை சபாநாயகர் பிர்லா பேச வைத்து வருகிறார். நேற்ற பசியை மறந்து 3 மணி நேரம் அவையை நடத்தியதால் எதிர்க்கட்சிகள் வெகுவாக பாராட்டின.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதை தொடந்து 17வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. 17வது மக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஓம் பிர்லா கடந்த 19ம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.. மக்களவை கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களாக சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது.

10ம் நாளான நேற்று கேள்வி நேரத்தின் போது அவரவர் தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதி பிரச்சனைகளை அவையில் எடுத்துவைத்து பதில் பெற்றனர். இதனால் நேற்று அவை எந்த பிரச்னையும் இல்லாமல் விறுவிறுப்பாக சென்றது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் காட்டாமல் அனைவருக்கும் நேரம் வழங்கி பேச வைத்தார்.
இந்த சூழலில் சபாநாயகர் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராயை பேசுவதற்கு அழைத்தார். அப்போது சவுகதா பேசுகையில், "சபாநாயகர் பசியை மறந்து தொடர்ந்து 3 மணி நேரம் அவையை தொடர்ந்து நடத்தி வருகிறார். வருங்கால தலைமுறையினருக்கு சபாநாயகர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்கட்டாக விளங்குகிறார்" என்றார்.
அதன்பின்னர் பேசிய பாஜக எம்பி கோபால் ஷெட்டி, கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தியது பாராட்டத்தக்கது என்றார்.
அனைவரும் சுவராஸ்யமாக அவையில் பேசிக்கொண்டு இருந்ததால் யாருக்கும் சாப்பாடு நேரம் போனதே நேற்று தெரியவில்லை. இதனால் அவை தொடர்ந்து 3 மணிநேரமும் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தது. பின்னர் பிற்பகல் 2.30 மணி அளவில் உணவு ஓய்வுக்காக அரை மணி நேரம் மட்டும் அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் அவை தொடர்ந்து நடந்தது.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications