தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யனும்.. மீண்டும் நோட்டீஸ் கொடுக்க ரெடியான எதிர்க்கட்சிகள்!
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பதவி நீக்க நோட்டீஸை கொடுக்க எதிர்க்கட்சிகள் ரெடியாகி வருகின்றன.
இந்த முறை சட்ட ரீதியாக வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், கூடுதல் எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (SIR) போது லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எஸ்ஐஆர் மேட்டரில், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
இதற்கு முன்னர், கடந்த மார்ச் 12-ஆம் தேதி மக்களவையில் 130 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 63 எம்.பி.க்களும் கையொப்பமிட்டு நோட்டீஸ் அளித்தனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவைத் தலைவர்களால் அவை நிராகரிக்கப்பட்டன.
எனவே 7 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீண்டும் நோட்டீஸ் வழங்க, எதிர்க்கட்சிகள் ரெடியாகி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தவறியது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவது என 7 முக்கியமான புகார்களை எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் மீது சுமத்தியுள்ளன.













Click it and Unblock the Notifications