விவசாயிகள் போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.

இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, என்.சி.பி. தலைவர் சரத் பவார், சிபிஐ (எம்) சீதாராம் யெச்சூரி, இ.கம்யூ சார்பில் டி ராஜா, திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

Opposition party leaders to meet President Kovind over farm bills today

மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராாம்நாத் கோவிந்தை சந்திக்கும் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

"நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை வைக்கும் முன்னர், நாங்கள் ஐந்து பேரும் சந்திக்க உள்ளோம். நாங்கள் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் பேசினோம், எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். கொரோனா நிலைமை காரணமாக நாங்கள் ஐந்து பேர் மட்டும் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளோம்" என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Opposition party leaders to meet President Kovind over farm bills today

விவசாய பிரதிநிதிகள் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. இன்று 14வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+