லாக் டவுனில் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் - மோடி பெருமிதம்
இந்த லாக் டவுன் காலத்தில் இந்தியாவின் கிராமங்களில் மக்கள் விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்று பிரதமர் மோடி தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசும் போது கூறியுள்ள
டெல்லி: கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கால கட்டத்தில் மக்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் லாக்டவுன் கால கட்டத்தில் மக்கள் விளையாடும் பல்லாங்குழி, பரமபதம்,கல்லாங்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் அவர்களை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாதந்தோறும் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். கொரோனா லாக் டவுன் பரவி வரும் இன்றைய கால கட்டத்தில் தேசத்தின் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்றைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்தார்.

நமது தேசம் ஆன்மீக தேசம், உலகத்திற்கே பல நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்தான பாரம்பரிய மருந்துகளை நம் நாட்டில் இயற்கையாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். நமது நாட்டின் சமையல் அறையில் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சியும் மஞ்சளும்தான் தற்போது கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் பயன்படுத்தி வருவதாக கூறினார் மோடி.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தற்போது நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வாக இருக்கும் மக்கள் பலரும் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்லாங்குழி கர்நாடகாவின் அலிகுலி மனே விளையாட்டு பிரபலமாக விளையாடுகின்றனர்.
குழி குழியாக உள்ள தட்டில் முத்துக்களை நிரப்பி விளையாடும் இந்த விளையாட்டு தென்னிந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியா ஏன் உலகம் முழுவதுமே தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டுக்கள் மட்டுமல்லாது பாரமபதம் எனப்படும் ஏணி பாம்பு விளையாட்டு, கல்லாங்கல் எனப்படும் சிறு கற்களை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டுக்களை தற்போது இன்றைய சிறுவர்களும் விளையாடுகின்றனர்.
இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள்தான் நம் தேசத்தின் மக்களை இன்றைக்கும் உயிர்போடு வைத்திருக்கிறது. இதே போல கிராமங்களில் தாயம் விளையாட்டும் விளையாடுகின்றனர். சோழி, புளியமுத்துக்களைக் கொண்டும் விளையாடும் இந்த விளையாட்டுக்கள் இன்றைக்கும் கிராம மக்களிடையே பிரபலமாக விளையாடப்படுகிறது என்று கூறினார் மோடி.
தொடர்ந்து பேசிய அவர், இந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் சமூக சேவை செய்து வரும் பலரையும் பாராட்டினார். கடந்த மாதம் பேசும் போது பாராட்டிய மதுரையைச் சேர்ந்த மோகனின் சேவையை இந்த மாதமும் நினைவுபடுத்தினார். சலூன் கடை வைத்திருக்கும் மோகன், தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் சேமிப்பு பணத்தை தனது பகுதியில் வசிக்கும் மக்களுக்காக அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவினார். தனது குடும்ப நலனைத்தாண்டி மக்களுக்காக சேவை செய்யும் நல்ல உள்ளங்களை மோடி இன்றைக்கும் பாராட்டியதோடு வாழ்த்து தெரிவித்தார்.
-
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications