கோடிக்கணக்கானவர்களுக்கு பலன்.. விவசாயிகள் நலன் காப்பதில் உறுதியாக உள்ளோம்.. பிரதமர் மோடி
டெல்லி: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ. 340 ஆக வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 8% அதாவது ரூ. 315-லிருந்து 340 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இதுவரை இல்லாத அளவில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ. 340 வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்" என்றார்.
இந்நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது என பாராட்டியுள்ள பிரதமர் மோடி, விவசாயிகள் நலனில் எப்போதும் அக்கறையாக உள்ள தனது அரசுக்கும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
நமது விவசாய சகோதர சகோதரிகளின் அனைத்து நலன்களையும் பூர்த்தி செய்வதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இந்த அடிப்படையில், கரும்பு கொள்முதல் விலை உயர்வு என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கு இந்த முடிவு பலனளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications