ஒரே நாளில் 1.2 கோடி பேர் இலவச தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு.. எப்போது போடலாம்
டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட 1.2 கோடி பேர் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து தகவல்கள் இல்லை.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போட முன்பதிவு புதன்கிழமை நாடு முழுவதும் தொடங்கியது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 55லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக http.//www.cowin.gov.in என்ற இணையதளத்திலும், ஆரோக்கிய சேது ஆப்பிலும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு
இதற்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது. இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து கொண்டனர். முன்பதிவு செய்தவர்கள், மே 1ம் தேதி அந்தந்த தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 நிமிடம் காத்திருப்பு
இந்நிலையில் 18 வயதுக்கும் மேற்பட்ட பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்று இணையதளம் மற்றும் செல்போன் மூலம் முன்பதிவு செய்ய முயன்றதால் சிக்கல் ஏற்பட்டது. இணையதளத்திற்குள் நுழைந்து செல்போன் எண்ணை உள்ளீடு செய்யும் போது ஒடிபி எண் கிடைக்கும்.. பலர் செல்போன் எண்ணை ஒரே நேரத்தில் உள்ளீடு செய்ததால் ஒடிபி பலருக்கு 3நிமிடம் கழித்தே வந்தது. சிலருக்கும் 3 நிமிடம் கழித்தும் வரவில்லை ஒடிபியை உள்ளீடு செய்ய 3 நிமிடம் மட்டுமே அவகாசம் தரப்பட்டதால் பலராலும் உள்ளீடு செய்ய இயலவில்லை. இதனால் நேற்று பலர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

எவ்வளவு சாத்தியம்
பிற்பகல் 4 மணிக்கு தொடங்கிய உடன் 90 சதவீதம் பேர் ஒரேநேரத்தில் முன்பதிவு செய்தனர். மாலை 4 மணி முதல் இரவு 7மணிக்குள் 383 மில்லியன் பேர் பதிவு செய்ய ஆன்லைனில் குவிந்தனர். இதனால் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக நேற்று ஒரே நாளில் 1.23 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மே1ம் தேதியே தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லாதது என்கிறார்கள்.

தடுப்பூசி போடப்படும்
பல்வேறு மாநிலங்கள் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் மருந்து அவர்களுக்கு கிடைத்துள்ள அளவின் அடிப்படையிலேயே தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவார்கள் என்று தெரிகிறது. சில மாநிலங்களில் மே1ம் தேதி தொடங்குவது கூட தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்து தடுப்பூசி போட வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications