POk-வில் பயங்கரவாத முகாம்கள் மீது பாய்ந்த ஏவுகணைகள்.. இந்தியா தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி
டெல்லி: காஷ்மீரின் அமைதியை குலைக்கும் வகையில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகீதின் ஆகிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் இந்திய மண்ணில் இருந்து கொண்டே பயங்கரவாத முகாம்களை டார்கெட் செய்து இந்த தாக்குதலை இந்தியா முன்னெடுத்து உள்ளது.

ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகீதின் ஆகிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ளது. இந்தியா நடத்தியிருக்க கூடிய இந்த தாக்குதலில் 80 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.
பஹவல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள முகாம்களில் தான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரண்டு முகாம்களிலும் 25 முதல் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிற பயங்கரவாத முகாம்களில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற விவரங்களை இந்தியா இன்னும் சேகரித்து வருகிறது.
இந்தியாவின் முப்படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்'- தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் குறி வைக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.
பவல்பூர், சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோல, சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள பயங்கரவாத முகாம்களில் மட்டும் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தி இருந்தன.













Click it and Unblock the Notifications