திகார் சிறையிலிருந்து வரும்போது ஆல் டைம் ஃபேவரைட்டுடன் வெளியே வந்த ப சிதம்பரம்
Recommended Video
டெல்லி: டெல்லி திகார் சிறையிலிருந்து வெளியே வந்த ப சிதம்பரம் தனக்கு மிகவும் பிடித்தமான திருக்குறள் நூலுடன் வெளியே வந்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மோசடி புகார் தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிபிஐ கஸ்டடியில் இருந்து வந்த நிலையில் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலிருந்து அவர் சிறைக்கு செல்லும் போது மருந்து மாத்திரை, மூக்குக் கண்ணாடி உள்பட தனக்கு தேவையான பொருட்களுடன் சென்ற ப சிதம்பரம் எப்போதும் தனக்கு பிடித்த புத்தகமான திருக்குறளையும் கொண்டு சென்றார்.

கம்பராமாயணம்
இதைத் தொடர்ந்து அவ்வப்போது ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு தாக்கல் செய்தும் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே சிபிஐ கைதுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சிதம்பரத்திற்கு நீதிமன்ற அறையில் கம்பராமாயண புத்தகத்தை கொடுத்தார் அவரது மனைவி நளினி சிதம்பரம்.

சிதம்பரம்
இந்த நிலையில் 100 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்த அவரது ஜாமீன் மனு மீது நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் சிதம்பரம் வெளியே வந்தார்.

ஆதரவாளர்கள்
அப்போது சிறை வாயிலில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சிதம்பரம் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். அப்போது அவரது கையில் சிகப்பு நிற அட்டையிலான ஒரு புத்தகத்தை வைத்திருந்தார்.

பிடித்தமான நூல்
நர்மதா பதிப்பகத்தின் பதிப்பில் உருவான திருக்குறள் புத்தகத்தைதான் அவர் வைத்திருந்தார். சிதம்பரத்திற்கு மிகவும் பிடித்தமான நூல் என்றால் அது திருக்குறள்தான். இந்த பதிப்பகத்தின் நூலில் தமிழில் எளிய நடையில் திருக்குறளுக்கான விளக்கம் எழுதப்பட்டிருக்கும். நல்லாட்சி முதல் விவசாயம் வரை அவ்வப்போது நாடாளுமன்றத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் திருக்குறளை சிதம்பரம் சுட்டிக் காட்டுவது வழக்கமான ஒன்றாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications