சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரிய வழக்கு நிலுவையில் இருந்தபோது சிபிஐ கைது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவர் ரௌஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது 2-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

அப்போது சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அல்லது கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

தடை

தடை

அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மீதான தீர்ப்பு செப்.5-ஆம் தேதி அளிக்கவுள்ளதை சுட்டிக் காட்டி தனக்கு 74 வயதாகிறது என்றும் தன்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள் என்றும் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்தார். இதையேற்ற நீதிபதிகள் வரும் 5-ஆம் தேதி வரை சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப தடை விதித்தனர்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

மேலும் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கில் சிதம்பரத்தை 5-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டனர். இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிவடைகிறது. இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் தர முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு

வழக்கு

இந்த நிலையில் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்கு இடையூறாக இருக்கும் என கருதி சிபிஐ கைதுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+