இறங்கி அடிங்க.. இதுதான் சரியான நேரம்.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்க மாஜி லெப்டினன்ட் ஜெனரல் ஐடியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் பாகிஸ்தானை தாக்க வேண்டிய சரியான நேரம் இது. பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்துவதற்கான போதுமான பலம் நம்மிடம் இருக்கிறது என்று இந்திய ராணுவத்தின் ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான் ஐடியா கொடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலமாக பஹல்காம் உள்ளது. இங்குள்ள புல்மேடு பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் நிறையபேர் சென்றனர். அப்போது 4 பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

pahalgam-incident-retired-lt-gen-kjs-dhillon-says-its-time-to-strike-pakistani-military

விட்டுவிடும்படி கெஞ்சியும் கூட மனம் இறங்காமல் அப்பாவி மக்களை இந்த பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆனாலும் பலரும் எச்சரிக்கையாக சம்பவ இடத்தில் இருந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர்.

இந்த தாக்குதலுக்கு எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையாக செயல்படும் ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற

பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதனால் விரைவில் பாகிஸ்தான் மீது போர் விமானங்கள் அல்லது ஏவுகணை மூலம் நம் நாடு தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் பாகிஸ்தான் ராணுவத்தை தாக்க இதுதான் சரியான நேரம் என்பது இந்திய ராணுவத்தின் 15வது கார்ப்ஸின் ஓய்வு பெற்ற முன்னாள் கமாண்டிங் ஆபிசரான லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஆக்ரோஷமாக கூறியதாவது: நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் மட்டுமே காரணம். பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு தேவையான பலம் நம்மிடம்
உள்ளது.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதல் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரதமர் சவூதி அரேபியா சென்ற நிலையில், அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு சுற்றப்பயணம் செய்யும் வேளையில் நடந்துள்ளது. இதன்மூலம் பயங்கரவாதிகள் உரத்த செய்தியை நமக்கு அனுப்பி உள்ளனர். உலகம் முழுவதும் கவனத்தை திசைதிருப்பவும், ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் அமைதியை சீர்க்குலைக்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் தான் வெளிநாட்டு தலைவர் இந்தியா வந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீரில் முழு அமைதி திரும்பி அடுத்தக்கட்ட முன்னேற்றத்துக்கான காலம் வருவதை நாம் அனைவரும் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைய தாக்குதல் அத்தகைய முன்னேற்றத்துக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.

நாங்கள் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகள் என்று தவறாக நினைக்க வேண்டாம் என்று நம் வீரர்கள் பொதுமக்களிடம் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானை தாக்க வேண்டிய சரியான தருணம். அதற்கான பலம் அனைத்தும் நம்மிடம் உள்ளது'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+