பஞ்சாப்புக்குள் பறந்து வந்து விழும் ஏ.கே.47 துப்பாக்கிகள்.. பாகிஸ்தான் அட்டூழியம்
Recommended Video
டெல்லி: ட்ரோன்களின் உதவியுடன் பாகிஸ்தான் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் இந்திய எல்லைக்குள் வீசிச் செல்கிறது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட மெகா பயிற்சி, இந்தியஎல்லையில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இருந்தது. பல ரோந்துப் பணிகளை ஏற்பாடு செய்யப்பட்டு எல்லை கண்காணிக்கப்பட்டது.

இந்த சோதனையின்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்கள் மூலம் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஏராளமான ஏ.கே .47 துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தூக்கிப்போடப்பட்டதாக, பஞ்சாப் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத தொடக்கத்தில் இதுபோன்ற 8 சம்பவங்கள் நடந்தன, ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த ரெடியாக உள்ள தீவிரவாதிகளுக்கு இவ்வாறு பாகிஸ்தான் ஆயுதங்களை சப்ளை செய்கிறதாம்.
இதுபோன்ற குறைந்த உயரத்தில் பறக்கும் பொருட்களின் இயக்கத்தை கண்காணிக்கும் வசதி தங்களுக்கு இல்லை என்று எல்லை பாதுகாப்பு படை கூறுகிறது. பெரும்பாலும் இரவு நேரத்தில் ட்ரோன்கள் வருகின்றன. அதை வெறும் கண்களால் கண்காணிக்க முடியாது. ரேடார்தான் கண்காணிக்க முடியும் என்று பாதுகாப்பு படை தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications