நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்பு!
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க சட்டசபை, நாடாளுமன்ற கூட்டங்கள் நடக்காமல் தள்ளி போய் வருகிறது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் சட்டசபை கூட்டங்கள் நடந்தது.
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க சட்டசபை, நாடாளுமன்ற கூட்டங்கள் நடக்காமல் தள்ளி போய் வருகிறது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் சட்டசபை கூட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு, சோதனை, சமூக இடைவெளி உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறார்கள். அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா சபாநாயகர் வெங்கையா நாயுடு மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓபி பிர்லா ஆகிய இருவரிடமும் அமைச்சரவை அதிகாரிகள், செயலாளர்கள் இது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். சமூக இடைவெளியுடன் இருக்கைகளுக்கு இடையே இடம் விட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அமைச்சர்கள், எம்பிக்களின் இடம் இந்த கூட்டத்தொடரில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு அருகே யாரும் அமர வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications