ராகுல் பதவி பறிப்பு: தொடர் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்- சபாநாயகர் இருக்கை நோக்கி பேப்பர் வீச்சு!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியை பறித்ததைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்றும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபை நடவடிக்கைகளும் 11-வது நாளாக முடங்கின. லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை நோக்கி பேப்பரை கிழித்து காங்கிரஸ் எம்பிக்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடர்பாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஆனால் ராகுல் மேல்முறையீடு செய்ய அனுமதித்தது 30 நாட்களுக்கு இந்த சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளும் நேற்றும் முடங்கின. இன்றும் காலை நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். டெல்லியில் இன்று மாலை நடத்தப்படும் கண்டன பேரணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே அமளி நீடித்ததால் பகல் 2 மணி வரை சபை நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள், பேப்பரை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகலில் சபை கூடிய போதும் அமளி நீடித்தது. இதனால் சபை நடவடிக்கைகள் 11-வது நாளாக முடங்கியது. கடந்த வாரம் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசிய பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க கோரியது பாஜக. இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
முன்னதாக பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி இழிவாக பேசியதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் ஓபிசி சமூக எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்











Click it and Unblock the Notifications