அக்.27ல் கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு.. 3 முக்கிய சட்டங்களில் வரப்போகுது மாற்றம்!
டெல்லி: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றைப் புதிய மசோதாக்களுடன் மாற்றுவது தொடர்பான வரைவு அறிக்கைகளை ஏற்பதற்காக அக்டோபர் 27ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷயா ஆகிய பெயர்களில் ஆன சட்டங்களை கொண்டு வருவது தொடர்பான மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், வரும் அக்டோபர் 27ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றைப் புதிய மசோதாக்களுடன் மாற்றுவது தொடர்பான வரைவு அறிக்கைகள் பரிசீலிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications