7 தானே கேட்டது விமானப்படை.. பிறகு ஏன் 2 மட்டும் வாங்குகிறீர்கள்.. ப.சிதம்பரம் கேள்வி
Recommended Video

டெல்லி: விமானப்படை பலவீனமாக உள்ளது. போர் விமானங்கள் பற்றாக்குறை உள்ளது என்றால் அவர்களின் கோரிக்கைப்படி விமானங்களை வாங்காமல் குறைத்து வாங்குவது ஏன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குள்ளாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ஒரு கேள்வியை அவர் கேட்டுள்ளார்.
Air Force says its fighter aircraft strength is depleted and it needs at least 7 squadrons (126 aircraft). Then, why did the government buy only 2 squadrons (36 aircraft)?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 15, 2018
அதில், விமானப்படை போர் விமானங்கள் பற்றாக்குறை இருப்பால், 7 ஸ்குவாட்ரான் (126 ரபேல் விமானங்கள்) தேவை என்று கேட்டதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் அரசு வெறும் 2 ஸ்குவாட்ரான் (36 ரபேல் விமானங்கள்) விமானங்களை மட்டும் வாங்கியது என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications