இதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி? நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி!
பிரதமர் மோடியை விட தகுதியான நபர் யாரும் இல்லை என்று மக்கள் கருதியதால், அவர் தேர்தலில் வெற்றிபெற்றார் என்று நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மோடியை விட பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் யாரும் இல்லை என்று மக்கள் கருதியதால், அவர் தேர்தலில் வெற்றிபெற்றார் என்று நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி 2019ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்று இருக்கிறார். அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான இவர்கள் செய்த ஆய்வுதான் இந்த பரிசுக்கு காரணம். காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான இவர் பிரதமர் மோடி குறித்து அளித்துள்ள பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.

மோடி
அபிஜித் பானர்ஜி அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதனால் மக்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். அதேபோல் அவரை எதிர்த்து யாருமே, அவர் அளவிற்கு தகுதியானவர்கள் என்று மக்கள் கருதவில்லை.

என்ன கொள்கை
ஆனால் மக்கள் அவரின் கொள்கைக்காக வாக்களித்தார்கள், திட்டங்களுக்காக வாக்களித்தார்கள் என்று கூற முடியாது. மக்கள் மோடிக்காக மட்டுமே வாக்களித்தனர். மக்கள் திட்டங்களை கருத்தில் கொண்டு வாக்களித்து இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

திட்டம் எப்படி
நியாய் திட்டத்தை நான் முழுமையாக வடிவமைக்கவில்லை. காங்கிரஸ் என்னிடம் சில தகவல்களை மட்டுமே பெற்றது. அந்த திட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்டது கிடையாது. ஒருவேளை காங்கிரஸ் வென்று இருந்தால் அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டிய நிலை இருந்திருக்கும்.

நிர்மலா சீதாராமன்
ஜேஎன்யூவில் நான் படித்த போதுதான் அமைச்சர் நிர்மலா சீதாராமனும் படித்தார். இருவருமே ஒரே நேரத்தில் அங்கு படித்தோம். நாங்கள் நண்பர்கள் ஆனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. சில பிரச்சனைகளில் நாங்கள் ஒருமித்த குரல் கொடுத்துள்ளோம், என்று அபிஜித் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications