கொரோனாவுக்கு முன்பு போல் தற்போதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு!.. புட்டு புட்டு வைக்கும் புள்ளிகள்
டெல்லி: கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் தற்போது பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கால் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற வாகன ஓட்டிகள் வீட்டுக்குள்ளேயே கிடந்தனர்.
மேலும் தினந்தோறும் அலுவலகத்தில் வேலைபார்த்தவர்களுக்கு வீட்டில் வேலை பார்க்கும் வசதி இருந்தால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவின் எரிபொருள்
இதனால் வாகன நடமாட்டம் இல்லாமல் குறைந்ததால் இந்தியாவின் எரிபொருள் தேவையானது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது. கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் பயன்பாடு, கொரோனாவுக்கு முன்பு இருந்த இயல்புநிலையை நெருங்கியது. இருந்தாலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது.

எரிபொருள் பயன்பாடு
ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரித்தது. மொத்தம் 23.70 லட்சம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகம்.

ஜூலை மாதம்
கொரோனாவுக்கு முன்பு அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23.90 லட்சம் டன் பெட்ரோல் விற்பனை ஆகியிருந்தது. அதே நிலையை தற்போது எட்டியுள்ளது. கடந்த மாதம் 54.59 லட்சம் டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவீதம் அதிகம்.

தீபாவளிக்குள் விற்பனை
ஆனால் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீதம் குறைவு. தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் வைத்யா தெரிவித்துள்ளார். விமானங்கள் முழுமையாக இயக்கப்படாததால், விமான எரிபொருள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், சமையல் எரிவாயு பயன்பாடு, ஊரடங்கு காலத்திலும் அதிகரித்தே வருகிறது. எரிபொருள், சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரித்தாலும் மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. இதற்கு காரணமாக இந்த கொரோனா காலகட்டத்தில் பைக், கார் மூலம் சொந்த ஊரிலிருந்து பணி செய்யும் ஊருக்கு திரும்பியிருக்கலாம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications