ஏர் இந்தியா விமான விபத்து குறித்த கட்டுரை.. கொதித்தெழுந்த விமானிகள் கூட்டமைப்பு.. பறந்த நோட்டீஸ்!
டெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து, விமானிகளின் அலட்சியம் காரணமாக நடைபெற்றது என்ற ரீதியில் அமெரிக்கா ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டு இருந்த நிலையில், இதற்கு கடும் கணடனத்தை இந்திய விமானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கட்டுரைக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர ஏனைய அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்கள் உள்பட மொத்தம் 260 பேர் இந்த விபத்தில் பலியாகினர்.

ஏர் இந்தியா விமான விபத்து
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அண்மையில் முதல் கட்ட அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் விமானத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யும் ஸ்விட்ச் கட் ஆனதே காரணம் என்று தெரியவந்துள்ளது. விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது விசாரணை அறிக்கை மூலம் தெரியவந்து இருப்பதாக ஏர் இந்தியாவும் கூறியுள்ளது.
இந்திய விமானிகள் கூட்டமைப்பு கண்டனம்
இதற்கிடையே, முதல் கட்ட அறிக்கையை வைத்து எந்த ஒரு இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையேதான், ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கையை வைத்து அமெரிக்காவின் வால்ஸ் ஸ்டீரீட் ஜர்னல் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், இ விமானிதான் கவனக்குறைவாக சுவிட்சை ஆஃப் செய்திருப்பார் என செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பக் கூடாது எனவும் மன்னிப்பு கோர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளதாவது:- விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும் போதே, பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிட கூடாது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
ஊடக தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். வெளியான அறிக்கை இறந்து போன இரு விமானிகளை அவமதிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்தாருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் இது உள்ளது.
அவர்கள் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும். விசாரணை முழுமையாக நிறைவடையும் வரை இது தொடர்பான எந்த தகவல்களையும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் நோட்டீஸ்க்கு சட்டப்படி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவன சி இ ஓ
முன்னதாக ஏர் இந்தியா விபத்து தொடர்பாக முதல் கட்ட அறிக்கை வெளியான சில நாட்கள் கழித்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் சில முக்கிய கருத்துகளை கூறியிருந்தார். அவர் கூறுகையில், "ஏஏஐபி முதற்கட்ட அறிக்கையில் தங்களுக்கு எந்தவொரு பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விவகாரத்தில் முன்முடிவுகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார். விமானம் அல்லது என்ஜினில் அல்லது அதன் பராமரிப்பில் சிக்கல்களும் கண்டறியப்படவில்லை" என்றும் கூறியிருந்தார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications