உற்பத்தி துறைக்கு ரூ.1.97 லட்சம் கோடி...பட்ஜெட்டில் ஒதுக்கீடு
டெல்லி : இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி துறைக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறுகையில், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. நமது உற்பத்தி துறை இரட்டை இலக்க அளவில் வளர்ச்சியை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

இதை அடைய, 13 துறைகளுக்கு ஆத்மநிர்பார் பாரதத்திற்கான உற்பத்தி உலகளாவிய வல்லுனர்களை உருவாக்குவதற்கான பி.எல்.ஐ திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய தரத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்காக உற்பத்தி துறைக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே 3 ஜவுளி பூங்காக்கள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications