சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை சரி செய்வதற்கான திட்டங்களுடன் நிர்மாலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.,

பட்ஜெட்டில் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்றார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு சுமார் 64,180 கோடி ரூபாய் நிதியில் 'பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா' (PM Atmanirbhar Swasth Bharat Yojana ) என்ற திட்டம் தொடங்கப்படும்
ஸ்வஸ்த் பாரத் திட்டம் மூலம் தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய 3 விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications