“முஸ்லிம் லீக் வந்தே மாதரம் பாடலை வெறுத்ததால்.. நேரு அதை தேசிய கீதமாக ஆக்கவில்லை” - மோடி
டெல்லி: "முஸ்லிம் லீக் கட்சி வந்தே மாதரம் பாடலை வெறுத்தது. ஆகவே வந்தே மாதரம் பாடல் இஸ்லாமியர்களை எரிச்சல் அடைய செய்யலாம் என கருதிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அப்பாடலை தேசிய கீதமாக ஆக்கவில்லை" என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சித்துள்ளார். முஸ்லிம் லீக்-க்கு காங்கிரஸ் அடிபணிந்துவிட்டதாகவும், தேசிய பாடலை துண்டு துண்டாகப் பிரித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்களை தூண்டி விடும் என்று நேரு கூறியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சி எம்பிக்கள், வெட்கக்கேடு, வெட்கக்கேடு என்று முழங்கினர். அப்போது பிரதமர், கடந்த நூற்றாண்டில் சில சக்திகள் தேசியப் பாடலுக்கு துரோகம் இழைத்தன. யார் அதைச் செய்தார்கள் என்பதை அடுத்த தலைமுறைக்குச் சொல்வது நமது கடமை என கூறினார். முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக், 1937-ல் வந்தே மாதரத்திற்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸ் மற்றும் நேரு அதனை எதிர்க்காமல், மாறாக, வந்தே மாதரம் குறித்து விசாரிக்கத் தொடங்கினர் என்று விமர்சித்திருந்தார்.
மேலும் பேசிய பிரதமர், "ஜின்னாவின் எதிர்ப்பிற்குப் பிறகு, பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், வந்தே மாதரத்தின் பின்னணியை தான் படித்ததாகவும், அது முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு எரிச்சலடையச் செய்யலாம் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், வந்தே மாதரத்தின் பயன்பாட்டை, அதுவும் பங்கிம் சந்திரரின் வங்காளத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆராய்வோம் என்றும் நேரு எழுதியிருந்தார்.
வந்தே மாதரம் 50 ஆண்டுகளை எட்டியபோது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளை எட்டியபோது அவசரநிலையின் பிடியில் இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்கமளித்த இந்த பாடல், துரதிர்ஷ்டவசமாக அப்போது இந்தியாவின் ஒரு 'இருண்ட காலத்திற்கு' சாட்சியாக இருந்தது.
இப்போது, வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வேளையில், 1947-ல் நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த பெருமையையும், நமது கடந்த காலத்தின் மகத்தான பகுதியையும் மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இது அமைகிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1875 நவம்பரில் எழுதிய இந்த பாடல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு விரைவாகவே ஒரு வலிமைமிக்க முழக்கமாக மாறியது" என்று கூறியுள்ளார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications