மே 3-ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு... லாக்டவுனை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்தார் மோடி
டெல்லி: மத்திய அரசு விதித்திருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடியவிருந்த நிலையில் அதனை மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார் பிரதமர் மோடி.
அதன்படி நாளை முதல் மேலும் 19 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் லாக்டவுன் காலம் 40 நாட்கள் ஆகிறது.

இதனிடையே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், லாக்டவுனால் மக்கள் படும் சிரமங்களும், துயரங்களும் தனக்கு புரிகிறது என்றும் இருப்பினும் கொரோனாவை ஒழிப்பதற்கு இதுவே சிறந்த வழிமுறை எனவும் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றை பொறுத்தவரை மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
நாடு முழுவதும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வருவது கொரோனாவுக்கு எதிரான போரில் மேலும் உத்வேகத்தை தருவதாகவும், ராணுவ வீரர்களை போல் மக்கள் கட்டுப்பாடுகள் காக்கிறார்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் பாதிப்புகள் அதிகமாவதற்கு முன்பே அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறினார்.
இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிபதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளை வரும் மே மாதம் 3-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications