பரபர சூழலில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி.. மசோதாக்களை விரைவுபடுத்த அறிவுரை!
டெல்லி: அமைச்சரவை மறுசீரமைப்பு விரைவில் நடைபெறலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விஷன் 2047க்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்த கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இஸ்ரோ தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2047 தொலைநோக்குத் திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான பொது நிதியுதவி, சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள் போன்ற 16 முக்கிய பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 20ஆம் தொடங்கவிருக்கும் நிலையில், அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த மசோதாக்களை விரைந்து முடிக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு பலன் நிறைந்த அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பன்முக கொள்கை தொடர்பான விவகாரங்களில் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம் எனப் பதிவிட்டுள்ளார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications