உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல- பிரதமர் மோடி
Recommended Video
டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல... தோல்வியும் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. மேலும் அயோத்தியில் சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட வழங்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு.

இத்தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்து
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல. சமநிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு. அது ராம் பக்தி அல்லது ரஹீம் பக்தி என இருந்தாலும் தேச பக்தி உணர்வை நாம் வலிமைப்படுத்துவோம். சட்டத்தின் நடைமுறையின்படி எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, தொலைநோக்கு ஆகியவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்பதை தெளிவாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்துகிறது.
நீண்டகால விவகாரத்துக்கு நீதித்துறை சுமூகமான முறையில் தீர்வை கொடுத்துள்ளது. அனைத்து தரப்புக்கும் போதுமான அவகாசம் வழங்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இத்தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தேசத்தின் 130 கோடி மக்கள் கடைபிடிக்கும் அமைதியும் சமாதானமும் இணைந்த வாழ்க்கை மீதான உறுதியை வெளிப்படுத்துகிறது. இது நமது தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கான ஆற்றலை வழங்கட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications