சர்வதேச அளவில் பிரதமர் மோடி தான் டாப்.. 70% மக்கள் ஆதரவு.. அடித்து கூறும் புதிய சர்வே
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி தான் டாப்பில் உள்ளார்.
Recommended Video
தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சர்வதேச அளவில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கு மக்களிடம் எந்தளவுக்கு ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறியத் தொடர்ந்து சர்வே நடத்தும்.
மக்களிடையே நடத்தும் இந்த சர்வே-இன் அடிப்படையில், எத்தனை சதவிகிதம் பேரின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஒரு தலைவருக்கு உள்ளது என்பது குறித்த தகவல்களை தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிடும்.

பிரதமர் மோடி தான் டாப்
அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சர்வே முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 70% மக்கள் ஆதரவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். மோடிக்குப் பின், 64% மக்கள் ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 2ஆவது இடத்திலும், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63% ஆதரவுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ( 52%), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (48% ), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (48% ), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45% ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

முழு விவரம்
இந்திய பிரதமர் மோடி 70%
மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 64%
இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63%
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52%
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 48%
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48%
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 45%
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 39%
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 38%
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 35%
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் 34%
ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 25%

எதிர்ப்பு மிகக் குறைவு
இதில் பிரதமர் மோடி அதிகபட்சமாக 70% மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தோரின் சதவிகிதமும் 25% ஆகக் குறைந்துள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட போது, பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகரித்துள்ளது. நாட்டில் இப்போது கொரோனா பாதிப்பு நிலை மெல்ல முன்னேறி வரும் நிலையில், பிரதமர் மோடியின் ஆதரவும் மக்களிடையே அதிகரித்து வருவதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா முதல் அலை
அதிகபட்சமாக கொரோனா முதல் அலை ஏற்பட்ட சமயத்தில், கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடியின் ஆதரவு 84%ஆக அதிகரித்தது. முதல் அலையைச் சிறப்பாகக் கையாண்டு, வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கப் பிரதமர் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவரது அவரது செல்வாக்கு அப்போது மக்களிடையே அதிகரித்தது. நாடு முழுவதும் உள்ள மக்களிடம் ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட சர்வே மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications