ஆடிக்கிருத்திகை விழா.. கடவுள் முருகனை நினைத்து தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
டெல்லி: ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடி கடவுள் முருகனை நினைவுக்கூறி தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஆடிக்கிருத்திகை முக்கியமான நாளாகும். இந்த தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆறுபடை வீடுகளில் விழா
அதன்படி இன்று ஆடிக்கிருத்திகை விழா கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ள தமிழகத்தில் எப்போதும் ஆடிக்கிருத்திகை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சவாமிமலை, திருத்தணி, சோலைமலை உள்ளிட்ட ஆறுபடை வீடுகளில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பக்தர்கள் விரத வழிபாடு
இதுதவிர தமிழகத்தில் உள்ள பிற முருகன் கோவில்களில் விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றி முருகனை வழிப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

கந்த சஷ்டி பாராயணம்
இந்த நாளில் விரதம் கடைப்பபிடித்தால் எண்ணிய செயல் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பலர் கஷ்டங்கள் விலகி நல்ல விஷயங்கள் நடக்க வேண்டி ஒருமனதாக முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் ஆகியவற்றை பாராயணம் செய்தனர். பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து பாராயணம் செய்யவும் சில கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூக நலத்துடனும், வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்'' என கூறியுள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications