டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்தமானில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா வீரர்கள் பெயரை சூட்டிய பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இதுவரை பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருதுகள் பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டினார்.

PM Modi names 21 largest unnamed islands of Andaman Nicobar with Param Vir Chakra awardees

பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை தீவுகளுக்கு பெயரிடுவது அவர்களுக்கு என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும். பிரதமரின் பெருமுயற்சியின் வெளிப்பாடாக நிஜ வாழ்க்கை பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம்

ஜனவரி 23-ம் தேதி பராக்ரம் திவாஸ்-பராக்கிரம தினமான இன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை நரேந்திர மோடி சூட்டினார். இந்த நிகழ்வின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

PM Modi names 21 largest unnamed islands of Andaman Nicobar with Param Vir Chakra awardees

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018 ஆம் ஆண்டு தீவுக்கு பிரதமர் மோடி சென்ற செய்த போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது.

நிஜ வாழ்க்கை பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் செயல்படுவார். இந்த உணர்வின் வெளிப்பாடாக, அங்குள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

குடியரசு தின நாளில் கிராம சபை கூட்டம்..இந்த 7 விசயங்களை அவசியம் விவாதிக்க வேண்டும்..அரசு உத்தரவு குடியரசு தின நாளில் கிராம சபை கூட்டம்..இந்த 7 விசயங்களை அவசியம் விவாதிக்க வேண்டும்..அரசு உத்தரவு

பெயரிடப்படாத மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும், இரண்டாவது பெரிய பெயரிடப்படாத தீவுக்கு இரண்டாவது பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும் சூட்டப்படும். தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக இறுதியான உயிர்த்தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு இந்த சிறப்பான நடவடிக்கை என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும்.

English summary
PM Modi names 21 largest unnamed islands of Andaman Nicobar after Param Vir Chakra awardees today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X