பிரதமர் மோடி - புதின் தொலைபேசியில் பேச்சு.. வாக்னர் குழு கலகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லி: பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டைக் கடந்து இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பக்க பலமாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது.

ரஷ்யாவின் அதிகார தலைமையை மாற்றுவோம் என மாஸ்கோ நோக்கி வாக்னர் குழு சென்றது. எனினும், பெலாரஸ் அதிபர் தலையீட்டால் ரஷ்யாவுக்கு எதிரான வாக்னர் குழு கலகம் முடிந்தது. இதன் காரணமாக புதினுக்கு ஏற்பட இருந்த பெரும் நெருக்கடி தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் இன்று தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது உக்ரைன் விவகாரம் மற்றும் வாக்னர் குழு கலகம் உள்பட பல்வேறு விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. எனினும் இந்த உரையாடலின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications