ஏன் அந்த சிங்கம்?.. மோடி ஷேர் செய்த ஒரு டிவிட்.. பெரிய விவாதம்.. காரணம் என்னவோ?
பிரதமர் மோடி டிவிட்டரில் பகிர்ந்த சிங்கத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி: பிரதமர் மோடி டிவிட்டரில் பகிர்ந்த சிங்கத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி எல்லோருக்கும் தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதன்பின் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் முக்கியமான படம் ஒன்றை பகிர்ந்தார்.
வெல்கம் கேப்டன்.. எச். ராஜா குஷி.. "கேப்டனை விட்ருங்கய்யா பாவம் அவரு".. நெட்டிசன்கள் கலாய்!
|
மோடி ரீடிவிட்
பிரதமர் மோடி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். குஜராத் தேஷ் என்ற டிவிட்டர் பக்கம் வெளிட்டு இருந்த சிங்கத்தின் புகைப்படம் ஆகும் இது. இதை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்து இருந்தார்.
என்ன புகைப்படம்
பிரதமர் மோடி ஷேர் செய்திருந்த புகைப்படத்தில் ஒரு சிங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் கிர் காட்டில் இருக்க கூடிய சிங்கம் அது. மரத்தின் மேல் அந்த சிங்கம் அமர்ந்து இருந்தது. இதை லவ்லி புகைப்படம் என்று மோடி ஷேர் செய்து இருந்தார்.
விவாதம்
மோடி, ஒரு சிங்கத்தின் புகைப்படத்தை எல்லாம் இப்படி ஷேர் செய்வது இதுவே முதல்முறையாகும். சரியாக தேர்தல் அறிவித்த மறுநாளே மோடி இதை ஷேர் செய்து இருக்கிறார். இதனால் இது பல கேள்விகளை, விவாதங்களை எழுப்பி உள்ளது. மோடி ஏன் இப்படி செய்தார் என்று விவாதம் செய்யப்பட்டு வருகிறது.
என்ன பாராட்டு
சிலர் இது பிரதமர் மோடி தன்னை குறித்து குறிப்பிடுவதற்காக சொல்லி இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். பிரதமர் மோடிதான் சிங்கம். அதை குறியீடாக சொல்வதற்கே மோடி இந்த புகைப்படத்தை ஷேர் செய்து இருக்கிறார் என்று பாஜகவினர் பேசிவருகிறார்கள். ஆனால் இதற்கான உண்மையான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.