ஜி20: மீடியா சென்டருக்கு விசிட் அடித்த பிரதமர் மோடி.. கேள்வி எழுப்ப மைக்குகளை நீட்டிய ஊடகங்கள்!
டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடி, ஜி 20 மாநாடு நடைபெற்ற இடத்தில் இருந்த சர்வதேச மீடியா சென்டருக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர்களையும் மக்களையும் பார்த்து கைகளை அசைத்தார். சில ஊடகங்கள் கேள்வி எழுப்ப முயன்ற போதும் மோடி அதனை தவிர்த்து விட்டார்.
ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்தக் கூட்டத்தின் இரண்டு நாள் கூட்டம் 9 மற்றும் 10 என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஜி 20 டெல்லி மாநாட்டின் இரண்டாம் நாளில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மகாத்மா காந்தியின் சமாதியில் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் பாரத் மண்டபத்திற்கு தலைவர்கள் வருகை தந்தார்கள். உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வு, 'ஒரு எதிர்காலம்' என்ற பெயரில் நடத்தப்படும், அந்த இடத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து தலைவர்களின் ஒருமித்த ஜி 20 பிரகடனம் வெளியிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டு ஜி 20 மாநாட்டின் தலைமை பிரேசிலுக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் நிறைவு உரை நிகழ்த்தினார்.
மாநாடு நடைபெற்று முடிந்த பிறகு தலைவர்கள் புறப்பட்ட பிறகு பாரத் மண்டபத்தில் உள்ள மீடியா சென்டருக்கு பிரதமர் மோடி திடீர் விசிட் அடித்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமர் மோடியை பார்த்ததும் உற்சாகத்தில் கைகளை அசைத்தனர். பிரதமர் மோடியும் வேகமாக சிரித்தபடியே கைகளை காட்டிகொண்டு நடந்து சென்றார். அப்போது, சில கேள்விகளை எழுப்ப அங்கு நின்ற பத்திரிகையாளர்கள் முயற்சித்தனர். ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து விட்டு சென்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications