Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜி20: மீடியா சென்டருக்கு விசிட் அடித்த பிரதமர் மோடி.. கேள்வி எழுப்ப மைக்குகளை நீட்டிய ஊடகங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மோடி, ஜி 20 மாநாடு நடைபெற்ற இடத்தில் இருந்த சர்வதேச மீடியா சென்டருக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர்களையும் மக்களையும் பார்த்து கைகளை அசைத்தார். சில ஊடகங்கள் கேள்வி எழுப்ப முயன்ற போதும் மோடி அதனை தவிர்த்து விட்டார்.

ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். ஆகியவற்றை உள்ளடக்கியது.

PM Modi Sunday evening visit the International Media Centre at the Bharat Mandapam

இந்தக் கூட்டத்தின் இரண்டு நாள் கூட்டம் 9 மற்றும் 10 என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஜி 20 டெல்லி மாநாட்டின் இரண்டாம் நாளில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மகாத்மா காந்தியின் சமாதியில் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் பாரத் மண்டபத்திற்கு தலைவர்கள் வருகை தந்தார்கள். உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வு, 'ஒரு எதிர்காலம்' என்ற பெயரில் நடத்தப்படும், அந்த இடத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து தலைவர்களின் ஒருமித்த ஜி 20 பிரகடனம் வெளியிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டு ஜி 20 மாநாட்டின் தலைமை பிரேசிலுக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் நிறைவு உரை நிகழ்த்தினார்.

மாநாடு நடைபெற்று முடிந்த பிறகு தலைவர்கள் புறப்பட்ட பிறகு பாரத் மண்டபத்தில் உள்ள மீடியா சென்டருக்கு பிரதமர் மோடி திடீர் விசிட் அடித்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமர் மோடியை பார்த்ததும் உற்சாகத்தில் கைகளை அசைத்தனர். பிரதமர் மோடியும் வேகமாக சிரித்தபடியே கைகளை காட்டிகொண்டு நடந்து சென்றார். அப்போது, சில கேள்விகளை எழுப்ப அங்கு நின்ற பத்திரிகையாளர்கள் முயற்சித்தனர். ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து விட்டு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+