வரலாற்று தோல்வியில் பாஜக.. இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டிருகிறது. இது பாஜகவுக்கான வரலாற்று தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றிரவு நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
இன்றிரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுகிறார். தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால், அத்துடன் இணைக்கப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவும் தோற்கடிக்கப்பட்டிருப்பதாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன.

இப்படி இருக்கையில், நாட்டு மக்களிடையே மோடி என்ன பேசப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. முன்னதாக இன்று காலை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மசோதா தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மறுபுறம், இன்று பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவிநாசியில் ரோட்ஷோ மேற்கொள்ளும் மோடி, இரவு 7.30 மணிக்கு மேற்கு வங்கம் புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications