ஜன. 6ல் பத்தனம்திட்டா வருகிறார் மோடி.. சபரிமலை விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும்!
பிரதமர் மோடி ஜனவரி 6 கேரளா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 6-ம் தேதி கேரளா வருகிறார். அப்போது சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டாவில் பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் எந்த அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பலம் பொருந்தி உள்ளதோ, அதே அளவுக்கு காங்கிரஸ் கட்சியும் உள்ளது.
இதில் கேரளாவில் பாஜகவை எப்படியேனும் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போதே அதற்கான வேலையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது பாஜக.

ரேபரேலி
குறிப்பாக 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக தலைமையிடத்தில் நிறையவே மாற்றம் தெரிகிறது. இதுவரை போகாத ரேபரேலிக்கு போய் நலத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு வந்தார் பிரதமர்.

ஜனவரி 6
அதேபோல, பாஜக பலவீனமாக உள்ள கேரளாவிற்கும் வருகிற ஜனவரி 6-ம் தேதி வர உள்ளார். இதற்கு முன்பு பலமுறை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேரளா சென்று கட்சியை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பினும், பிரதமர் மோடி செல்ல உள்ளது கவனிக்கத்தக்கதாக கருதப்படுகிறது.

பத்தனம்திட்டா நகர்
ஏனெனில் இன்னும் சபரிமலை பஞ்சாயத்தும் இந்த மாநிலத்தில் தீரவில்லை. தொடர் போராட்டம், உண்ணாவிரதம் என தற்போது வரை நீண்டு வருகிறது. சபரிமலை விவகாரத்தை இந்து அமைப்புகள் கையில் எடுத்துள்ள நிலையில் மோடி கேரளா வர உள்ளதும், சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா நகரில் உரையாற்ற உள்ளதும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கஜா புயல்
கஜா புயலால் பல உயிர்கள் பறிபோயும், எதிர்கால வாழ்வை எத்தனையோ பேர் இழந்த நிலையிலும், அரசியல் கட்சி தலைவர்கள் பலவித கண்டனங்களை தெரிவித்தும் தமிழகம் பக்கமே வராமல் இருக்கிறார் மோடி.

உற்சாகமாகி உள்ளனர்
ஆனால் கேரளாவில் எப்படியாவது எம்பி இடங்களை கணிசமாக பெற அங்கு கிளம்பி போக உள்ளது தமிழகம் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் பிரதமர் மோடியின் வருகை அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரள மாநில பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாகி உள்ளனர்.
-
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications