ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது.. மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்.. வாழ்த்து!
டெல்லி: பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் உரை நிகழ்த்தினார். ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது, என்று கூறிய பிரதமர் மோடி கேரள மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார். இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார்.

இந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 68வது நிகழ்வில் இன்று மோடி உரை நிகழ்த்தினார். நேற்று லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அன்லாக் 4.0 செயல்முறைகள் அமலுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
பிரதமர் மோடி இன்று தனது உரையில், கொரோனாவிற்கு இடையே நிறைய பண்டிகைகள் அடுத்தடுத்து வருகிறது.இது பண்டிகைகளுக்கான காலம். ஆனாலும் மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
ஓணம் பண்டிகை தற்போது கேரளாவில் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளை ஓணத்தை முன்னிட்டு அலங்கரித்து வருகிறார்கள். பூக்கோலம் போட்டு வீட்டை அலங்கரித்து வருகிறார்கள். ஓணம் - சத்யா உணவை கேரளா மக்கள் சமைத்து பகிர்ந்து கொள்கிறார்கள். பல விதமான கொண்டாட்டங்கள் விளையாட்டு போட்டிகளும் நடக்கிறது.
பல நாடுகளில் ஓணம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கூட ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் சர்வதேச விழாவாக மாறி வருகிறது.
இயற்கையை குறித்து நினைப்பதற்காக, அதை கொண்டாட விழாக்கள் நடக்கிறது. பூமியை, இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் பொறுமையுடன் கொரோனாவிற்கு இடையே எளிமை செயல்படுகிறார்கள், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் .
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications