மோடியின் வானொலி உரையில் சந்திரயான் கவிதை எல்லாம் ஓகே.. பிரக்ஞானந்தா பற்றி ஒற்றை வரி கூட இல்லையே?
டெல்லி: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய மன்கிபாத்- மனதின் குரல் வானொலி உரையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கவிதை வாசித்தார்; ஆனால் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகக் கோப்பை செஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரர் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் மோதி மிரளவைத்த தமிழ்நாட்டு சிறுவன் "இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா" பற்றி ஒரு வரி கூட குறிப்பிடவில்லையே என்கிற ஆதங்கம் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று மனதின் குரல் எனும் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இந்த உரையில்,

வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
திடமான உறுதியோடு
அனைத்திடர்களையும் தாண்டி
கரும் இருளை அழித்தொழிக்க
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது
என்று நிலவின் தென் துருவம் அருகே இந்தியாவின் சந்திரயா-3 விண்கலம் தரை இறக்கப்பட்டதை பெருமிதத்துடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் "ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும் கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. மிஷன் சந்திரயான் மூலம் அனைத்து நிலைகளிலும் பாரதம் வெல்ல விரும்புகிறது, வெல்வது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது என்பது புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளமாக ஆகி இருக்கிறது" என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.
சந்திரயான் - 3 நிலவில் சரித்திரம் படைத்த அதே நாளில்தான் அஜர்பைஜானில் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஒரு இந்திய சிறுவன், உலகின் முதல் நிலை வீரருடன் மோதி சமன் செய்து டை பிரேக்கர் சுற்றில்தான் வெற்றியை நழுவ விட்டார். தமிழ்நாட்டு வீரரான பிரக்ஞானந்தாவை உலகமே போற்றிப் பாராட்டி மெச்சுகிறது.
ஆனால் பிரதமர் மோடி, நாட்டின் எத்தனையோ விளையாட்டு வீரர்களை தமது வானொலி உரையில் குறிப்பிட்ட போது, தமிழ்நாட்டு பிரக்ஞானந்தாவை சொல்லாமல் விட்டது ஆதங்கத்தைத் தருகிறது என்கின்றன சமூக வலைதளப் பதிவுகள்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications