Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் வானொலி உரையில் சந்திரயான் கவிதை எல்லாம் ஓகே.. பிரக்ஞானந்தா பற்றி ஒற்றை வரி கூட இல்லையே?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய மன்கிபாத்- மனதின் குரல் வானொலி உரையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கவிதை வாசித்தார்; ஆனால் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகக் கோப்பை செஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரர் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் மோதி மிரளவைத்த தமிழ்நாட்டு சிறுவன் "இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா" பற்றி ஒரு வரி கூட குறிப்பிடவில்லையே என்கிற ஆதங்கம் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி இன்று மனதின் குரல் எனும் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இந்த உரையில்,

PM Modis Mann Ki Baat not mention Tamil Nadu Chess Grand Master Praggnanandhaa

வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
திடமான உறுதியோடு
அனைத்திடர்களையும் தாண்டி
கரும் இருளை அழித்தொழிக்க
சூரியன் இதோ உதித்திருக்கிறது.
வானத்திலே தலைநிமிர்த்தி
கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு
ஒளியை வழங்கும் உறுதியோடு
சூரியன் இதோ உதித்திருக்கிறது

என்று நிலவின் தென் துருவம் அருகே இந்தியாவின் சந்திரயா-3 விண்கலம் தரை இறக்கப்பட்டதை பெருமிதத்துடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் "ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும் கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. மிஷன் சந்திரயான் மூலம் அனைத்து நிலைகளிலும் பாரதம் வெல்ல விரும்புகிறது, வெல்வது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது என்பது புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளமாக ஆகி இருக்கிறது" என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.

சந்திரயான் - 3 நிலவில் சரித்திரம் படைத்த அதே நாளில்தான் அஜர்பைஜானில் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஒரு இந்திய சிறுவன், உலகின் முதல் நிலை வீரருடன் மோதி சமன் செய்து டை பிரேக்கர் சுற்றில்தான் வெற்றியை நழுவ விட்டார். தமிழ்நாட்டு வீரரான பிரக்ஞானந்தாவை உலகமே போற்றிப் பாராட்டி மெச்சுகிறது.

ஆனால் பிரதமர் மோடி, நாட்டின் எத்தனையோ விளையாட்டு வீரர்களை தமது வானொலி உரையில் குறிப்பிட்ட போது, தமிழ்நாட்டு பிரக்ஞானந்தாவை சொல்லாமல் விட்டது ஆதங்கத்தைத் தருகிறது என்கின்றன சமூக வலைதளப் பதிவுகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+