மோடியின் 40 நிமிட அதிரடி, ஆவேச பேச்சு.. காஷ்மீர் இளைஞர்ளை ஒட்டுமொத்தமாக கவர்வாரா?
டெல்லி: ஜம்மு- காஷ்மீரில் மிகப் பெரிய தொழில் வளர்ச்சியை கொண்டு வந்தால் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பது என்ற அஜெந்தாவை பிரதமர் மோடி கையிலெடுத்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 39 நிமிடங்களுக்கு உரையாற்றினார். இதில் ஜம்மு- காஷ்மீரின் கடந்த கால வளர்ச்சி, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில மக்கள் முன்னேற கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்தி அவற்றை நன்றாக பராமரித்தாலே போதும். இதைத்தான் மக்கள் ஒவ்வொரு ஆட்சியாளர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றனர்.

இளைஞர்கள்
இந்த ஆயுதத்தைதான் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அரசு கையிலெடுத்தது. அப்போது பாஜக அரசு 50 வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்தது. அதில் பெரும்பாலும் இளைஞர்களை கவர்வதாகவே இருந்தது.

கருப்பு பணம்
அவற்றில் மிக முக்கியமானவை சில: குற்றம்புரிந்த மக்கள் பிரதிநிதிகள் மீதான நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டமாட்டோம். பாஜகவினராகவே இருந்தாலும் நடவடிக்கை பாயும் என மோடி அளித்த வாக்குறுதி இளைஞர்கள் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்தது. அது போல் ஊழலை ஒழிப்போம், கருப்பு பணத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு
மிக முக்கிய வாக்குறுதியாக 70 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என கூறினார். ஜவுளித் துறையின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளி தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்றார். இது போல் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் விதத்திலேயே வாக்குறுதிகளை வழங்கியது.

தீவிரவாதம்
இதனால் 2014-இல் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி பேசுகையில் மிகப் பெரிய தொழில் வளர்ச்சியை ஜம்மு காஷ்மீரில் கொண்டு வந்து தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பது என்று பேசியுள்ளார்.

வேலையின்மை
ஜம்மு- காஷ்மீரை பொருத்தவரை 18, 19 வயது இளைஞர்களில் பெரும்பாலானோர் கல்வீச்சு சம்பவத்திலும் கலவரம் நடத்துவதிலும் பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கு காரணம் வேலையின்மை என கூறப்படுகிறது.

கவருமா
காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என மோடி அறிவித்துள்ளதால் இந்த தேர்தலில் வெற்றி பெற இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், காஷ்மீரின் வளர்ச்சி, தீவிரவாதம் ஒழிப்பு என இளைஞர்களை குறிவைத்தே பேசியுள்ளார். எனவே அவரது இந்த 39 நிமிட பேச்சு காஷ்மீர் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக கவருமா என்பது போக போகத்தான் தெரியும்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications