NEP 2020: தாய்மொழியுடன் பிற மொழியையும் கற்கும்போதுதான் இந்தியா வளம் பெறும்- பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: தாய்மொழியுடன் பிற மொழியையும் கற்கும் போதுதான் இந்தியா வளம்பெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஸ்மார்ட் இந்தியாஹேக்கத்தான் 2020-ன் இறுதிச் சுற்றின் போது மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசினார்.
அவர் பேசுகையில் உலகின் வளர்ந்த நாடுகள் தாய்மொழி கல்வி மூலம் தான் ஏற்றம் பெற்றுள்ளன. தாய்மொழியுடன் பிறமொழியையும் கற்கும் போதுதான் இந்தியா வளம்பெறும். மனப்பாட முறையிலிருந்து செயல்வழிக் கல்வியை நோக்கி செல்ல வேண்டும்.

இந்தியா
புதிய கல்விக் கொள்கையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம் ஆகும். பல துறைகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய சமூகம் எதிர்பார்ப்பதை புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றியுள்ளது.

களஞ்சியம்
இதுநாள் வரை கல்வி துறையில் இருந்த பிரச்சினைகள் இந்த புதிய கொள்கை மூலம் களையப்படும். வேலையை தேடுவதற்கு பதிலாக வேலையை உருவாக்குவதே புதிய கல்விக் கொள்கையாகும். இந்தியா பல நூறுமொழிகளின் களஞ்சியம், அவற்றை கற்க நம் வாழ்நாள் போதாது.

மாணவர்கள்
2035ஆம் ஆண்டுக்குள் கல்வி வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விருப்பப் பாடங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கற்பது, கேள்வி கேட்பது, தீர்வை தருவது - ஆகிய மூன்றையும் மாணவர்கள் விடக் கூடாது.

அபார நம்பிக்கை
இன்றைய இளைஞர்களின் மீது அபார நம்பிக்கை உள்ளது. தாய்மொழியின் மூலம்தான் ஒருவரின் முழு திறமையும் வெளிப்படும். 21 நூற்றாண்டு மாணவர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications