எளிமை.. மக்களோடு மக்களாக.. அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடியின் தம்பிக்கு டயாலிசிஸ் சிகிச்சை!
டெல்லி: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி சாதாரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் சிகிச்சை பெற்று கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை பெயர் தாமோதர்தாஸ் மோடி. தாய் பெயர் ஹிரா பென் மோடி. இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் பிறந்தன. இதில் 4வது குழந்தையாக பிறந்தவர் பிரகலாத் மோடி. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி ஆவார்.

அதாவது தாமோதர்தாஸ்-ஹிரா பென் மோடி தம்பதிக்கு சோமாபாய் மோடி, அம்ரித் மோடி என 2 மகன்கள் பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3வது மகனாக பிறந்தார். அவருக்கு பிறகு பிரகலாத் மோடி 4வது மகனாக பிறந்தார். பிரகலாத் மோடி 2001ல் துவங்கப்பட்ட அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்டார்.
இந்நிலையில் தான் பிரகலாத் ஜோஷி பாதுகாவலர்கள் ஏதுமின்றி சாதாரண மக்கள் போல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரகலாத் ஜோஷி டயாலிசிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். வாரம் 2 முறை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் பிரகலாத் ஜோஷி நேற்று சாதாரணமாக உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சஞ்சய் நகரில் அமைந்துள்ளது மாவட்ட ஒருங்கிணைந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவர் எவ்வித பாதுகாப்பும் இன்றி வந்த நிலையில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து பிரகலாத் ஜோஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி மருத்துவமனையில் தலைமை டாக்டர் வினோத் சந்த் பாண்டே கூறுகையில், ‛‛இது வழக்கமான நடைமுறை தான். தற்போது அவருக்கு ரத்த டயாலிசிஸ் சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டது'' என்றார். மேலும் நேற்று பிரகலாத் ஜோஷி பிரதாப் விகார் பகுதியில் உள்ள தனது நண்பரின் இல்லத்தில் ஓய்வெடுத்தார். அதன்பிறகு காசியபாாத் பகுதியில் உள்ள உறவினர்களை அவர் சந்தித்தார்.
பொதுவாக பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வது இல்லை. தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டது செய்தியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மேற்காசிய போர் பதற்றம்.. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications