கொரோனா எதிரொலி.. ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி.. மக்களுக்கும் அறிவுரை
டெல்லி: கொரோனா வைரஸ் பீதியை அடுத்து ஹோலி கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார். மேலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கிய உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. அன்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்களில் நான் பங்கேற்க போவதில்லை என முடிவு செய்துள்ளேன்.
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
— Narendra Modi (@narendramodi) March 4, 2020
உலகம் முழுவதும் உள்ள சுகாதாரத் துறை நிபுணர்களும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே நீங்களும் பொது இடங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications