சண்டை நிறுத்தம்.. அமெரிக்கா அறிவிப்பது முதல்முறை.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க.. காங்கிரஸ்!
டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்திருப்பது இதுவரை இல்லாத ஒன்று என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் முகாமிட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லையோர மாவட்டங்களில் தாக்குதலை நடத்தி வந்தது.

அதேபோல் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததோடு, இந்தியா பதில் தாக்குதலையும் தொடுத்தது. நேற்றிரவு நடந்த சண்டையில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதோடு, விமான ஓடுதளங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. 3 விமான தளங்களை இந்தியா அட்டாக் செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது.
இதன்பின் அடங்கிய பாகிஸ்தான் உடனடியாக அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்தது. தொடர்ந்து மாலையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு தாக்குதலை கைவிட்ட இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டார். இதன் மூலமாக அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சக நிர்வாகிகள் சண்டை நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் தலையீட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்திருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்திருப்பது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.
அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பஹல்காம் தாக்குதல் தொடங்கி கடந்த 18 நாட்களில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications