பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ14,000 கோடி மோசடி... ஆன்டிகுவா-வில் இருந்தும் மெகுல் சோக்சி தப்பி ஓட்டம்!
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ14,000 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால் நாட்டைவிட்டு தப்பி ஓடி ஆன்டிகுவாவில் பதுங்கி இருந்த மெகுல் சோக்சி தற்போது அங்கிருந்தும் தப்பி ஓடி கியூபாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ14,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு மெகுல் சோக்சி, அவரது உறவினர் நீரவ் மோடி ஆகிய இருவரும் இந்தியாவை விட்டு தப்பி ஓடினர். இவர்களில் மெகுல் சோக்சி, கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் பதுங்கி இருந்தார்.

அத்துடன் அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து மெகுல் சோக்சியை ஆன்டிகுவா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ஆன்குடிவா நாட்டில் இருந்து 2 நாட்களுக்கு முன்னர் மெகுல் சோக்சி மாயமானார். இது தொடர்பாக ஆன்டிகுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே தப்பி ஓடிய மெகுல் சோக்சி, கியூபாவில் தஞ்சம் அடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. நீரவ் மோடியையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications