சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி மறுப்பு.. சாலையில் படுத்து பவன் கல்யாண் போராட்டம்.. இரவில் பரபர
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் அம்மாநில போலீசார் கைது செதுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சந்திர பாபு நாயுடுவை பார்க்க வந்த பவன் கல்யாணுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் சீரற்ற நிலையில் இருப்பதால் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரிடம் குழுவினர் சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 5 மணி நேரத்துக்கு மேலும் அவரிடம் விசாரணை நடந்தது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் வருகை தந்தார்.
அப்போது விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக பவன் கல்யாண் சென்றார். ஆனால் ஆந்திர எல்லைக்குள் வந்ததும் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காவல்துறை நடவடிக்கையால் ஆவேசம் அடைந்த பவன் கல்யாண் சாலையில் அமர்ந்தும் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திரா என்ன தனிநாடா, பாஸ்போர்ட் அவசியமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முன்னதாக எஸ்.ஐ.டி விசாரணையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அவரது குடும்பத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications