ஃபனி.. சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவு, 11 மாவட்டங்களில் தேர்தல் விதிமுறை தளர்வு! ஒடிசாவில் அலர்ட்
டெல்லி: ஃபனி புயல் ஒடிசாவில் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள சூழ்நிலையில், அங்கு11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்க வேண்டும் என்றபோதிலும், புயல் மீட்பு பணிகளுக்கு அதனால் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபனிப் புயல், மே 3ம் தேதி, ஒடிசாவில் கரையை கடக்க உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 205 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலால் 5 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பாத்ரக், பாலசோர், மேயுர்பஞ்ச், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டக் மற்றும் ஜெய்பூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தளர்வு அளிப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோவில் நகரமான பூரியில் இருந்து, சுற்றுலா பயணிகள் நாளை மாலைக்குள் வெளியேற வேண்டும் என்று, அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தியாவசியமற்ற பணிகளுக்காக யாரும் மேற்கண்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒடிசா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் ராணுவத்தின் முப்படைகளும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 41 குழுக்கள், இம்மூன்று மாநிலங்களிலும் தயார் நிலையில் உள்ளன. அதிகப்படியாக ஒடிசாவில் 28 குழுக்கள் களமிறங்கியுள்ளன.
நாளை முதலே, ஒடிசாவிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications