தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள்! முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எத்தனை மணிக்கு? EC வெளியிட்ட டேட்டா
டெல்லி: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், முதல் கட்டமாக 102 தொகுதிகளில் நடக்கும் தேர்தலில் வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்? எத்தனை மணிக்கு முடியும்? என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் நாடு முழுவதும் பார்த்தோம் என்றால் 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்: 21 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 28 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எப்போது தொடங்கும் எத்தனை மணிக்கு முடியும் என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறும்.
சத்தீஷ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணிக்கு முடிவடைகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே வாக்குப்பதிவு வழக்கமாக முடித்துக்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
அருணாசலபிரதேசம் - 2, அசாம் - 5, பீகார் - 4, சத்தீஸ்கர் - 1, மத்திய பிரதேசம் - 6, மகாராஷ்டிரா - 5, மணிப்பூர் - 2, மேகாலயா - 2, மிசோரம் -1, நாகலாந்து - 1, ராஜஸ்தான் - 12, சிக்கிம் - 1, தமிழ்நாடு - 39, திரிபுரா - 1, உத்தர பிரதேசம் - 8, உத்தரகாண்ட் - 5, மேற்கு வங்கம் - 3, அந்தமான் நிக்கோபர் தீவுகள் - 1, ஜம்மு காஷ்மீர் - 1, லட்சத்தீவு - 1, புதுச்சேரி - 1. ஆகிய மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தல்:
வேட்பு மனு தாக்கல்: மார்ச் 20
வேட்பு மனு கடைசி நாள்: மார்ச் 27
வேட்பு மனு பரிசீலனை : மார்ச் 28
திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications