பொன்னுத்தாய்க்கு 25 வயதே பூர்த்தியாகவில்லை.. வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டுவிட்டதே!
Recommended Video

டெல்லி: தென்காசி வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு 25 வயதே பூர்த்தியாகவில்லை. ஆனால் வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் மிக முக்கியமான தொகுதி என்றால் அது தென்காசி தொகுதிதான். இங்கு கள நிலவரமே பரபரப்பாக உள்ளது.
இங்கு போட்டியிடும் திமுக சுமார் 28 ஆண்டுகள் கழித்து நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த முறை அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

3 பொன்னுத்தாய்கள் போட்டி
அமமுக சார்பில் பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அமமுக பொன்னுத்தாய் இல்லாமல் சுயேச்சைகளாக மேலும் 3 பொன்னுத்தாய்கள் போட்டியிடுவதால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

வேட்பாளர்கள்
இந்த நிலையில் தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு கூறுகிறது.

சின்னம்
ஆனால் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கோ. பொன்னுத்தாய்க்கு 24 வயதுதான் ஆகிறது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு, சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை
இதுபோன்ற முரணான தகவல்கள் இருந்தால் அவை வேட்பு மனு சரிபார்த்தலின் போது நிராகரிக்கப்படும். ஆனால் இந்த வேட்பாளரின் வேட்புமனுவை அதாவது வயதை கூட சரிபார்க்காமல் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications