பிரணாப் முகர்ஜி பிரதமராகனும் என்று விரும்பினார்.. ஆனால்.. மகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிரதமராக விரும்பியதாகவும், ஆனால் அவர் அதை அடைய முடியாது என்பது அவருக்கே தெரியும் என்பதால் எந்தவித ஏமாற்றமும் இன்றி இருந்ததாக அவரது மகளும் எழுத்தாளரான ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜியின் மகளும், எழுத்தாளருமான ஷர்மிஸ்தா முகர்ஜி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், 2004 ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற பிறகு பிரணாப் முகர்ஜிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்ததைப் பற்றி தெரிவித்தார். அவர் பேசியதாவது, "பிரணாப் முகர்ஜி பிரதமராக விரும்பினார், ஆனால் அவர் அதை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரியும், எனவே அவர் ஒருநாள் பிரதமர் ஆகிவிடுவோம் என்ற மாயையில் அவர் இருக்கவில்லை.

எந்தவொரு தீவிர அரசியல்வாதியும் பிரதமராக விரும்புவார், ஆனால் அது நான் பிரதமராகிவிடுவேன் என்ற அர்த்தமாகி விடாது. பிரணாப் முகர்ஜி தனது அதிகாரத்திற்கு சவால் விடுப்பார் என்று சோனியா காந்தி கருதி, தனது குடும்பத்தின் நலனைப் பாதுகாத்து, தனது அதிகாரத்திற்கு சவால் விடாத ஒருவரை பிரதமராக நியமித்தார்." என்றார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அரசியலை விட்டு விலகிய முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தையின் சிறந்த வாழ்க்கையைப் பற்றி தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
சோனியா காந்தி தனது தந்தை பிரணாப் முகர்ஜியை பிரதமராக அறிவிக்கவில்லை என்பதற்காக அவர் மீது எந்த கசப்பு உணர்வையும் கொண்டிருக்கவில்லை என்றும், அப்போது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங் மீதும் நிச்சயமாக எந்த கசப்பு உணர்வையும் தான் வைத்து இருக்கவில்லை எனவும் கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகள், தனிப்பட்ட முறையில் அவர் அறிந்த தகவல்கள் மற்றும் ஆராய்ச்சி மூலம், ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தையுடைய அரசியல் வாழ்க்கையில், இதுவரை அறியப்படாத பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு இருக்கும் ரூபா பதிப்பகம் கூறியுள்ளது. சோனியா காந்தியின் நம்பிக்கையைப் பெற முடியாததால் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற பிரணாபின் ஆசை நிறைவேறவில்லை என்றும், நேரு - காந்தி குடும்பத்தைச் சுற்றி தனிமனித வழிபாடு இருப்பதாகவும், ராகுல் காந்தியின் மீது மக்களுக்கு ஈர்ப்பு இல்லை எனவும், அவருக்கு அரசியல் புரிதல் குறித்தும் அவர் விளக்கி இருக்கிறார்.
"இந்திரா காந்திக்குப் பிறகு மக்களின் துடிப்பை மிகவும் துல்லியமாகவும் உணரக்கூடிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி" என்று பிரணாப் முகர்ஜி தனது மகள் ஷர்மிஸ்தாவிடம் கூறியதாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பணிவான மனிதர். கேள்விகள் அதிகம் கொண்டவர். ஆனால் இன்னும் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையாதவர்" என்று பிரணாப் முகர்ஜி விவரித்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications